Friday 24 February 2017

கழு தை கழுதையாக


காதலிக்கும்போது
கழு தை என்று
செல்லமாய்த் தட்டினான்
கண்கள் குளமாயின
கண்ணீர் முத்துகளைக்
கையில் சேகரித்தான்
கழுதை என்றால்
அழகான பெண்ணென்ற
அகராதி அர்த்தத்தால்
ஆலாபனை செய்து
அகங்குளிர வைத்தான்

இப்போதும் அடிக்கடி
கழுதை என்று
கத்துகிறான் எனைப்பார்த்து
அழகான பெண்தானே
என்றுநான் கேட்டால்
அசடே
அதற்கும் உனக்கும்
இரண்டுகால் வித்தியாசம்
என்றுசொல்லி
அழுகைக்கு

அடித்தளமிடுகிறான்!
(புதுவை அரசின் 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதைநூலுக்குரிய பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியுடன் கூடிய கம்பன்புகழ் இலக்கிய விருது பெற்ற கவிஞர் ஔவை நிர்மலாவின் பெண்களின் கதை என்னும் கவிதை நூலிலிருந்து - (கவிஞர் ஔவை நிர்மலா, பெண்களின் கதை, காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2013, விலை ரூ80/-)

No comments:

Post a Comment