Thursday 27 November 2014

கருத்தரங்கம் நடக்குது பார்

கவிதாயினி அவ்வை நிர்மலா










பதவி ஒசர வேணுமுன்னா கண்ணம்மா
கருத்தரங்கம் கலந்துக்கணும் கண்ணம்மா

ஆய்வுசெஞ்சி எழுதிடவே கண்ணம்மா
அதிககால மாகுமடி கண்ணம்மா

வேறுயாரோ எழுதிவச்சத கண்ணம்மா
காப்பியடிச்சி அனுப்பறாங்க கண்ணம்மா

அஞ்சாறு பக்கத்துல கண்ணம்மா
ஆயிரம் தப்பு பண்ணறாங்க கண்ணம்மா

கருத்தரங்கம் ஏற்பாடாச்சு கண்ணம்மா
கட்டுரையும் பதிப்பிச்சாங்க கண்ணம்மா

கட்டுரையப் படிக்கவந்தா கண்ணம்மா
கருத்தக்கேக்க ஆளக்காணோம் கண்ணம்மா

தன்னுடைய பேச்சமட்டும் கண்ணம்மா
தரணுமுன்னு விரும்புறாங்க கண்ணம்மா

அவங்கபேச்சு முடிச்சதுமே கண்ணம்மா
அடுத்தவண்டி ஏறிடறாங்க கண்ணம்மா

மத்தவங்க கருத்தக்கேக்க கண்ணம்மா
பொறுமயில்ல சிரத்தயில்ல கண்ணம்மா

கண்மூடித் தனமாத்தான கண்ணம்மா
கருத்துகளக் குழப்பறாங்க கண்ணம்மா

உணர்ச்சியோங்கி இருப்பதாலே கண்ணம்மா
உண்மைதேட மனசுவல்ல கண்ணம்மா

அடுத்தவரை நக்கலடிச்சுக் கண்ணம்மா
ஆளசிலர் முழுங்குறாங்க கண்ணம்மா

விவாதமெல்லாம் சூடுபிடிச்சும் கண்ணம்மா
விழலுக்கிறச்ச நீராச்சுது கண்ணம்மா

சேரவேண்டிய எடத்தப்போயி கண்ணம்மா
கருத்துசேர முடியலயே கண்ணம்மா!

No comments:

Post a Comment