Sunday 15 February 2015

விற்கப்படும் விடியல்கள். . .

விற்கப்படும் விடியல்கள். . . 




சுவர்ண புஷ்பங்களால்
ஆடவரை
அர்ச்சிக்க இயலாமல்
திரும்பிவராத
வரன்களுக்கு ஏங்கி
வற்றிய கன்னங்களுக்கு
வாழ்க்கைப்பட்டதால்
முப்பது வயதில்
முதிர்கன்னிப் பட்டத்தோடு
காண்பவர்க்கெல்லாம்
காரிகைகள் தங்கைகளாக!

கவிஞர்களையெல்லாம்
கண்பார்வையாலேயே
உருவாக்கி விட்டாலும்
நிரந்தரக் கண்ணீரே
கன்னியர்க்கு
குருதட்சணையாக
கவிதைகளைப் புஷ்பித்துவிட்டு
இன்பம்கொள்ளும்
ஆண்கள்
உயிர்க் கவிதைகளுக்கு
ஏன் சந்தை கூட்டுகிறார்கள்?

No comments:

Post a Comment